Skip to main content

நான் யார் ?




அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
 
 

எழுத்துகளுக்கெல்லாம் ' அ ' எப்படி முதன்மையாக உள்ளதோ, அது போல் தான் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன. அப்படி உலகம் பிறந்த நாள் முதல் இப்பொழுது வரை உயிரினங்கள் எல்லா திசைகளிலும் பிறந்து கொண்டுதான் இருக்கின்றனர். மனிதர்களின் இன பெருக்கம் , மிருகங்களின் இன பெருக்கம் , மரம் செடி கொடி என அனைத்தும் இன பெருக்கம் செய்து கொண்டு தான் வருகின்றது. இருப்பினும் மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க உலகத்தில் உள்ள வளங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க படுகின்றனர். அதிலும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இருந்து நிறைய தனியார் நிறுவனங்கள் அவர்களின் தேவைக்கு ஏற்ப சுரங்கள் தோண்டி தங்கம் , வைரம் , உலோகம் என அனைத்தையும் எடுத்து விற்பனை செய்கின்றனர். காடுகளை அழித்து வீடு , தொழிற்ச்சாலை கட்டுவதும், மிருங்கங்களை வேட்டையாடி கொன்று உணவாக உண்பது மட்டும் அல்லாமல் , சிங்கம் , புலி , மான் , யானை என அறிய வகையான வன விலங்குகளின் பற்கள் , தோல் , தந்தம் இறைச்சி என அனைத்தையும் விற்று வியாபாரமாகி பணமாகின்றனர். இப்படி உலகம் விரைந்து செயல் பட்டு கொண்டு இருக்கும் கால கட்டத்தில் , பொருளாதாரம் குறித்தும் , சுற்று பயணம் மற்றும் மேற்கல்வி கற்க காரணமாக சிலரும் நாடு விட்டு நாடு சென்றனர்.


     கடல் வழி பயணம் செய்வது என்பது சுலபமான காரியம் அல்லஅதற்கு கடலின் நீரோட்டத்தை தெரிந்து இருப்பது மிகவும் அவசியம் ஆகிறதுஇல்லையேல் கப்பலில் பயணம் செய்பவர்கள் காணாமல் போய்விடுறார்கள் ஏனென்றால்உலகின் 71 சதவிதம் சுற்றளவு நீரால் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றுஆகையால் தான் அந்த காலத்தில்அதாவது கடல் கடந்து பயணம் செய்து , ஐரோப்பிய கண்டங்களில் உள்ள நாடுகளுடன் வியாபாரம் செய்த சோழமன்னர்களும் மற்றும் பாண்டிய மன்னர்களும் ஆமையின் உதவியுடனே பயணம் செய்தனர்இன்றய காலத்தில்நிலத்துக்கும் கடலுக்கும் தொடர்புடைய ஒரே விலங்கு இனம் ஆமை தான்நிலத்தில் பிறந்து கடலுக்கு சென்றுமீண்டும் முட்டை இட பிறந்த இடத்திற்கே வந்து முட்டை இடும்இதை வைத்து தான் அப்பொழுதே தமிழ் மன்னர்கள்சீனா , கிரேக்கம் என பல நாடு , கண்டம் என சென்று வியாபாரம் செய்து வந்தனர் என்பது மறைக்க முடியாதுஉண்மையாகும்

  

     கப்பலில் பயணம் செய்யலாம் ஆனால் வெகு நாட்கள் எடுக்கும் அதே சமயம் குறிப்பிட்ட அளவே ஆதாயம் பார்க்கமுடியும் மற்றும் அதிக ஆபத்து உள்ளதுகடலில் பொதுவாகவே பேரலை , சுழற்சி என பல ஆபத்துகள் உள்ளதுஒருவேலை கப்பல் முழுக்க தங்கம் நிறைத்து எடுத்து சென்று கொண்டு இருக்கும் பொழுது கனத்த மழையுடன் புயல்வீசினால் கப்பல் கடலிலையே மூழ்க வேண்டிதான்அதை மீண்டும் மீட்பது என்பது இயலாத காரியம் ஆகும்பெரும்செலவு மற்றும் நடுக்கடலில் சென்று ஆபத்தான வேலையை செய்ய யாரும் அவ்வளவு எளிதில் வர மாட்டார்கள்.  இதனால் பல மடங்கு நஷ்டம் அந்த தனியார் நிறுவனங்களுக்கு ஏற்படும்இருப்பினும் இதற்கு ஒரு வழி பிறக்கும் வரைகப்பல் மூலமே வியாபாரம் செய்து கொண்டு இருந்தனர்இப்படி இருக்கும் பொழுது 1903 , டிசம்பர் 17 அன்று முதல்வானில் பறக்கும் விமானம் ஒன்று பயணிகளை ஏற்றி செல்ல வில்பர் மற்றும் ஓர்வில்லே ரைட் ( Wilbur and Orville Wright ) இவர்களை ரைட் பிரோதெரஸ் ( The Wright Brothers ) என்றும் அழைப்பார்கள்


 

    

யாழ்ப்பாணம் நூலகம்


   இருந்தாலும் சுமார் 500 BCE - இல் இராவணன் புஸ்பக விமானம் வைத்து இருப்பதாக ராமாயணம் கூறுகின்றதுஇது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை காரணம் முறையான ஆதாரம் இல்லாததால்அதுமட்டும்அல்லாமல் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகம் ஒரு வேலை எரிக்காமல் இருந்திருந்தால் இதனுடையஆதாரம் கிடைத்து இருக்கும்சரி இப்பொழுது இது பற்றி பேச வேண்டாம்இப்படி அந்த சகோதரர்கள் இருவரும்கண்டுபிடித்தவுடன்  இதுதான் சரியான வாய்ப்பு என்று ஒரு சில தனியார் நிறுவனங்கள் இதில் முதலீடு செய்துஅவர்களுடைய வியாபாரத்தை மேலும் லாபத்தை ஈட்ட முயற்சி செய்தனர்இதனால் தான் இப்பொழுது உலகம்எங்கும் எல்லா நாடுகளிலும் விமானம் நிலையம் நிறுவப்பட்டு உள்ளதுஇதனுடைய உண்மையான காரணம் ஒன்றுசுற்று பயணம் செய்யும் மக்களுக்கு சுலபமாகவும் வசதியாகவும் இருந்தாலும் அதே சமயம் இதை ஒரு சிலர் தவறானமுறையிலும் பயன்படுத்தி கொள்கின்றனர்அதாவது திருட்டு தனமாக ஆயுதங்கள் கடத்துவது , போதை பொருள் , நான் ஆரம்பத்தில் கூறியது போல் ஒரு சிலர் வன விலங்குகளின் உறுப்புகளை கடத்தியும் மற்றும் பழங் காலத்தில்உள்ள அற்புதமான சிலைகள்தங்கம் , புத்தகங்கள் என பல வற்றையும் கடத்துகின்றனர்.

புஸ்பக விமானம் 

 

     இப்பொழுது நான் யார் என்று சொல்லும் நேரம் வந்து விட்டதுஆம் நான் வேறு யாரும் இல்லை....சற்றுபொறுங்கள் என்னை யாரோ ஒரு சிலர் தூரத்தில் இருந்து கவனிப்பது போல் உள்ளதுஉங்களிடம் நான் பேசுவதைபார்த்தால் எனக்குதான் ஆபத்துஅவர்கள் சென்றவுடன் உங்களிடம் என்னுடைய கதையை தொடர்கிறேன்.


 

தொடரும்...

Comments

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...