9 மாதம் 9 நாட்கள் இந்த 9 கிரகங்கள் அதனுடைய கதிர்களை குழந்தைகள் கருவில் இருக்கும் பொழுதேதருகின்றன. ஒவ்வொரு கிரகமும் குழந்தையின் உடலின் பாகங்களை அதன் இயல்புக்கு ஏற்ப உருவாக்குகிறது. குழந்தை கருவில் வளரும் நேரத்தில் ஒரு கிரகம் பலவீனமாக இருந்தால், அதையும் ஒரு வழியில் தீர்வு காண முடியும்என்பதையும் கூறுகிறார்கள் தமிழர்கள் விஞ்ஞான ரீதியில். கர்ப்பத்திலிருந்து 1 மாதம் வீனஸ் நடைமுறையில் உள்ளது, கர்ப்ப காலத்தில் வீனஸ் பலவீனமாக இருந்தால், வீனஸ் பலப்படுத்தப்பட வேண்டும். சுக்கிரன் ( Venus ) வலிமையாகஇருந்தால் குழந்தை மிகவும் அழகாக இருக்கும். அந்த நேரத்தில், ஒரு பெண் காரமான வகை விஷயங்களை சாப்பிடவேண்டும். இரண்டாவது மாதத்தில் செவ்வாய் ( Mars ) கிரகத்தின் தாக்கம் உள்ளதால் அதிக இனிப்பு சாப்பாடுகளைஉட்கொண்டு செவ்வாய் கிரகத்தை வலுப்படுத்தியும் மற்றும் சிவப்பு ஆடைகளையே அணிவார்கள். மூன்றாம் மாதத்தில்குருவின் தாக்கம் உள்ளதால் மஞ்சள் நிற ஆடைகளையும் மற்றும் பாலால் செய்யப்பட்ட இனிப்பு உணவுகளைஉண்பார்கள்.
சூரியனின் செல்வாக்கு நான்காம் மாதத்தில் இருக்கும். அதனால் அதிக பழச்சாறுகளை அருந்துவார்கள் மற்றும்ஐந்தாம் மாதத்தில் சந்திரனின் தாக்கம் இருப்பதால் பால் , சோறு மற்றும் வெள்ளை நிற ஆடைகளை அணிவார்கள். ஆறாம் மாதத்தில் சனி மற்றும் ஏழாம் மாதத்தில் புதனின் விளைவு இருப்பதால் பழங்கள் , கால்சியம் , பழச்சாறுகள்போன்றவை எடுப்பதுமட்டும்மல்லாமல் பச்சை நிற ஆடைகள் அணிவார்கள். எட்டாவது மற்றும் ஒன்பதாவது மாதம்மீண்டும் சூரியன் சந்திரன் இருக்கும். இந்த நேரத்தில் ஒரு கிரகம் தாழ்வாக பயணிக்கிறது என்றால் ஒரு முழு மாதம்யாகம் நடத்துவார்கள். காரணம் , உதாரணத்திற்கு ஒரு கோழி அதன் முட்டைகளுக்கு அதிக வெப்பத்தை அளிப்பதால்அதன் குழந்தை வலுவாக பிறக்கிறது இல்லையேல் வெப்பம் குறைந்தால் அதன் குஞ்சு பலவீனமாக பிறக்கும். இதேபோல் தான் ஒரு தாய் எவ்வளவு வலிமையானவளாக இருக்கிறாளோ அதற்கு தகுந்தாற்போல் கிரங்கங்களின்கதிரும் வலுவாக இருக்கும்.
இதையெல்லாம் அவள் குறித்து வைத்து விட்டு , பின்னர் சிறிது நேரம் கழித்து சிந்திக்க ஆரம்பித்தாள். அதாவதுஇந்த ஒரு ஓவியம் எவ்வளவு பயன்னுள்ளதாக இருக்கிறது ஆனால் ஏன் இதை பற்றி இணையத்தில் எந்த குறிப்பும்இல்லை என்று சிந்தித்து கொண்டே உறங்கினாள். மறுநாள் இந்த விஷியத்தை பற்றி ஆர்தரிடம் கூறிய பொழுது அவன்" இப்போது எனக்கு புரியுது ஏன் இத பத்தி யாருக்கும் தெரியல்னு " . உடனே மேகன் என்ன சொல்ல போகிறான் என்றுஅவனை பார்த்த பொழுது " உனக்கு இன்னும் தெரியலையா ? " . " மேகன் நல்லா யோசி இந்த ஓவியத்தோட வயசுசுமார் பல்லாயிரம் கோடி வருடம் இருக்கும். இப்படி ஒரு விளக்கம் மற்றும் குறிப்பு இருக்கிறது என்றால் , அனைவரும்இதை பின்பற்ற ஆரம்பித்து விடுவார்கள். அதே சமயம் குழந்தைகள் நோய் நொடிகள் இல்லாமல் ஆரோக்கியமாகபிறக்கும். அப்படி பிறப்பதினால் இங்கு இப்பொழுது உள்ள பல தனியார் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவநிறுவனங்கள் பொருளாதார அடிப்படையில் பாதிக்கப்படும். ஏனென்றால் தற்பொழுது உள்ள கர்ப்பிணி பெண்கள்குழந்தை ஆரோகியதுடன் பிறக்க வேண்டும் என்று எண்ணி எத்தனை முறை மருத்துவமனைக்கு வந்து மருந்து மற்றும்ஆலோசனைகளை பெற்று செல்கிறார்கள். இதன் மூலம் மட்டும் கோடிக்கணக்கான வருமானத்தை ஈட்டுகிறார்கள்தனியார் மருத்துவமனைகள் " என்றான் ஆர்தர்.
அதுமட்டும்மல்லாமல் நாம் தற்பொழுது இருப்பதோ வளர்ச்சி அடைந்த நாட்டில். ஆனால் இதை பற்றி எல்லாம்இப்பொழுது கூட நம்மால் சரியாக சொல்ல முடியாது. ஆனால் இதை பல்லாயிரம் கோடி வருடங்களுக்கு முன்னேதமிழர்கள் தெரிந்து வைத்து இருந்தார்கள் என்றால் நம்மை போல் உள்ள நாடுகளுக்கு அவமானம் என்றான் ஆர்தர். இதை கேட்டு விட்டு மேகன் " பரவாலையே உனக்கும் அறிவு இருக்கு " என்று சொல்லி சிறித்து கொண்டே அவனைவிடைத்தாள். " சரி நா இத ஒரு கோப்பி இதுல வெச்சிருரன் " என்று சொல்லி கணினியில் பதிவு இறக்கம் செய்தஉடன் " You've been watching . Your Life In Danger " என்று வந்தது. அது யார் அனுப்பியது , யார் அவளைகவனிக்கிறார்கள் , ஏன் அவள் வாழ்கை தற்பொழுது ஆபத்தில் இருக்கிறது என்று சிந்திக்கும் பொழுது மீண்டும் ஒன்றுதோன்றியது அந்த கணினியில். அது ஒரு காணொளி , அதில் நவம் ஓவியத்தின் மறுபாதியை கொடுத்த அந்தபெரியவரை யாரோ கொல்ல முயற்சி செய்யும் பொழுது அவர் மேகன் இருக்கும் வீட்டில் சென்று அவளுடையஅலமாரியில் ஏதோ ஒன்றை மறைத்து வைத்து வெளியேறும் பொழுது , அவர் கொலை செய்ய படுகிறார். அவர் பெயர்Professor Alex என்று அவர் அணிந்து இருக்கும் சட்டையின் tag - இல் இருந்தது. இதை பார்த்து அப்படியேவியப்படைந்த அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் " தேடல் ஆரம்பம் " என்று அதில் வந்தது.

Comments
Post a Comment