Skip to main content

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 2 )



       ஆம் நான் குமரன்தமிழர்களின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என சிறு வயது முதல் எனக்குள் ஆர்வம்இருந்ததுஆகையால் நான் கொஞ்சம் கொஞ்சமாக தமிழையும் தமிழர்களை பற்றியும் படித்து தெரிந்து கொண்டேன்அன்றைய தமிழகத்தை ஆண்டது சேர , சோழ , பாண்டியர்கள் மற்றும் பல்லவர்கள் ஆவார்கள்இதில் பாண்டியர்கள் குமரிக்கண்டத்தை ஆண்டுள்ளதாக ஒரு குறிப்பும் உள்ளதுஅதுமட்டும் அல்லாமல் இந்திய பெருங்கடலையே மறைத்துஇருந்தது என்றால் அதனுள் எத்தனை மன்னர்கள் ஆண்டு இருப்பார்கள் என்று எனக்குள் கேள்வி எழும்பியதுஇதைபற்றி மேலும் தெரிந்து கொள்ள என்னுடைய நண்பர்கள் சிலருடன் சட்டத்திற்கு எதிராக நாங்கள் கடலுக்குள்இறங்கி எங்களின் ஆய்வை மேற்கொண்டோம்இதனால் எங்களுக்கு நிறைய பணம் மற்றும் பொருட்செலவுஏற்பட்டதுஇதனால் சோர்வடைந்த நாங்கள் சிலமுறை ஆராய்ச்சியை நிறுத்திவிடலாம்  என்று கூட பேசிஇருக்கிறோம்இருப்பினும் அடுத்த தலைமுறையாவது தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதிற்காக இதையெல்லாம்பொருட்படுத்தாமல் வேலையில் இறங்கினோம்.



     அப்படி ஒரு நாள் இரவு நேரத்தில் இந்திய பெருங்கடலில் ஆராய்ச்சியை மேற்கொள்ள சென்றிருந்த பொழுது , தூரத்தில் குட்டி தீவு ஒன்று இருப்பதை பார்த்து அருகில் சென்ற பொழுது வியக்கும் அளவிற்கு எங்கள் கண்களுக்குஒன்று தெரிந்ததுஅது அந்த தீவு முழவதும் பளபள என ஒளி ( Glow ) வீசியதுஅதுமட்டுமல்லாமல் உடல் முழுவதும்பொற்கவசங்களுடன் இரண்டு வீரர்கள் அங்கு இருப்பதை கொண்டு வியந்து போய் நின்றோம்இது என்ன தீவகஇருக்கும் ? யார் அவர்கள் ? எப்படி இந்த ஒரு தீவு மட்டும் ஓளிவீசுகிறது ?



            இதுவரை இம்மாதிரியான ஒரு தீவை எங்கள் ஆராய்ச்சியில் கண்டதில்லை என்று , அதை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அருகில் சென்று தரை இறங்கினோம்நான் முதலில் என்னுடைய கால்களை தரையில்வைத்தவுடன் அந்த தீவின் மணல்களை கையில் எடுத்து பார்த்து வியந்தேன்அங்கு உள்ள மணல்கள் முதற்கொண்டுஅனைத்தும் ஒளிர செய்ததுமணல்கள் மட்டும்மல்லாமல் அங்குள்ள மரம் செடி கோடி என அனைத்திலிருந்தும் ஒளிவீச செய்ததுஅடுத்த நொடியே என்னுடைய நண்பன் ,

அருண் : குமரா எனக்கு என்னமோ இந்த இடம் சரியா படலஇந்த 3 மாசத்துல இது போல ஒரு தீவு இருந்ததா நம்பபார்த்ததே இல்லவா இங்க இருந்து கெளம்பெலாம்.

குமரன் : நீ சொல்லறது உண்மைதாஆனா எனக்கு என்னமோ இங்க ஏதோ ஒன்னு நமக்காக காத்திருக்குனுநினைக்கிறேன்.

என்று பேசி முடித்தவுடன் சற்று உள்ளே முன்னேறி செல்ல எங்கள் கைகளில் உள்ள தொழில்நுட்பம் வாய்ந்த ஒரு சிலபொருட்கள் செயல் இழந்து போக , திசைகாட்டியில் உள்ள முற்கள் ஒரு திசையை காட்டாமல் சுற்றி கொண்டேஇருந்ததுஉடனே பயந்து போன நாங்கள் அங்கிருந்து புறப்படலாம் என்று எண்ணிய பொழுது , கண்ணிமைக்கும்நேரத்தில் அந்த தீவை சுற்றி உள்ள மரங்களின் பின்னே இருந்து பலவீரர்கள் நெற்றியில் வெள்ளை நிறத்தில் பட்டை அடித்து அதில் இருந்து ஒளி வீச , கைகளில் ஆயுதங்களுடன் எங்களை சுற்றி வளைத்தனர்என்ன செய்வது என்றுதெரியாமல் நின்று கொண்டிருக்கும் அடுத்த நிமிடம் எங்களை சுற்றியுள்ள மரங்கள் வானத்தை நோக்கி உயர வளரஆரம்பித்தன

     நட்சத்திரம் மற்றும் நிலாவை மறைக்கும் அளவிற்கு வளர்ந்து அந்த தீவையே மூடியது.



தொடரும்...

Comments

Post a Comment

Popular posts from this blog

குமரி மறைந்த ராஜ்யம் ( பாகம் 4 )

     எனக்கு   அவர்   கூறியது   எதுவும்   புரியவில்லை ,   இருந்தாலும்   அவர்   பயன்படுத்திய   மொழி   சங்க   கால   தமிழ்   என்பதால் ஒரு சில வார்த்தைகளை வைத்து என்னால் அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டு    தங்களிடம்   நான் இப்பொழுது விளக்கி   கூறினேன் .  அதை   அடுத்து   அவர்   அதிர்வை   தரும்   வகையில்   பல   குறிப்புகளை   கூறினார் .  அதில் முக்கியமானதாக   மனித   இனம்   எப்படி   உருவானது  ,  மருத்துவ குறிப்புக்கள் மற்றும் தற்காப்பு   கலைகளின்   குறிப்புக்கள் பற்றி கூறினார் .  இதை   அனைத்தும்   ஓலைச்சுவடுகளில் எழுதி   வைத்து   அதை   குறிப்பிட்ட   ஒரு   அறையில்   வைத்து பாதுகாத்து   வந்துள்ளனர் .  எங்களுடைய   வருகையை   இதன்   மூலம்   தான்   இவர்கள்   தெரிந்து கொண்டு   எங்களை   இங்கு அழைத்து ...

மேகன் நவத்தின் மர்மம் ( பாகம் 5 )

     9  மாதம்  9  நாட்கள்   இந்த  9  கிரகங்கள்   அதனுடைய   கதிர்களை   குழந்தைகள்   கருவில்   இருக்கும்   பொழுதே தருகின்றன .  ஒவ்வொரு   கிரகமும்   குழந்தையின்   உடலின்   பாகங்களை   அதன்   இயல்புக்கு   ஏற்ப   உருவாக்குகிறது .  குழந்தை   கருவில்   வளரும்   நேரத்தில்   ஒரு   கிரகம்   பலவீனமாக   இருந்தால் ,  அதையும்   ஒரு   வழியில்   தீர்வு   காண   முடியும் என்பதையும்   கூறுகிறார்கள்   தமிழர்கள்   விஞ்ஞான   ரீதியில் .  கர்ப்பத்திலிருந்து  1  மாதம்   வீனஸ்   நடைமுறையில்   உள்ளது ,  கர்ப்ப   காலத்தில்   வீனஸ்   பலவீனமாக   இருந்தால் ,  வீனஸ்   பலப்படுத்தப்பட   வேண்டும் .  சுக்கிரன்  ( Venus )  வலிமையாக இருந்தால்   குழந்தை   மிகவும்   அழகாக   இருக்கும் .  அந்த ...

மேகன் நவதின் மர்மம் ( பாகம் 3 )

     அங்கு   ஒரு   வயதானவர்   நிறைத்த   முடியுடன்  ,  முகம்   மறைக்கும்   அளவிற்கு   தாடி   வைத்து   கொண்டு   இருந்தார் .  அவர்தான்   அர்த்தரிடம்   அந்த   ஓவியத்தை   எடுத்து   வந்து   கொடுத்தார் .  அது   அங்   அங்கு   கிழிந்த   நிலையில்   இருந்தது .  புறப்படும்   பொழுது   அந்த   பெரியவர்   மேகனை பார்த்து    மௌனமாக   சிரித்து  "  தேடல்   ஆரம்பம்   ஆகட்டும்  "  என்று சொன்னவுடன்   ஆர்தருக்கும்   அவளுக்கும்   ஒன்றும்   புரியாமல்   அங்கிருந்து   புறப்பட்டனர் .  பின்னர்   அலுவகத்தை   அடைந்த இருவரும்   அவர்களுடைய   வேலையை   பார்க்க   மேகன்   மீண்டும்   கணினியை   திறந்து   வேலையை   துடங்கினாள் .  சிறிது நேரம்   கழித்து   அதில்  "  மேகன்  Top Secret "  என்...